நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க 2 நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நோடல் அதிகாரிகளாக, கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப், பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்படுள்ளனர். இவரும் பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.