முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி கவிஞர் வைரமுத்து இன்று (ஜூன் 3) கலைஞர் இல்லத்திற்குச் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி வணங்கினார். அவரை கனிமொழி எம்பி வரவேற்றார்.
இதுபற்றி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
“ஒரு பூ மலர்வது
தனது செளந்தர்யத்தை
விளம்பரப்படுத்தவல்ல;
சுற்றுச் சூழலுக்குச்
சுகந்தம் பரப்ப
காற்று கைவீசித் திரிவது
தன் இருப்பை
இனங்காட்டவல்ல;
நாசிகளுக்கெல்லாம்
சுவாசம் பரிமாற
மழைத்துளி தரையிறங்குவது
இடிகளின் துரத்தலுக்கு
அஞ்சியல்ல;
பசித்த வேர்களின்
திரவ உணவுக்காக
பூவாய்
காற்றாய்
மழையாய்
இனம் மொழி மீது
இயங்கிய தலைவா
உன் நூற்றாண்டை எடுத்துப்
பல நூற்றாண்டுகள்
உடுத்துக் கொள்ளும்.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.