கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை வரை கனமழை கொட்டிய நிலையில் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. ஜூன் 7 மாலை தொடங்கி இரவிலும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
நகர பகுதியில் மட்டுமின்றி மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது.
மலையோர பகுதிகள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. மழையால் அணைகளுக்கான நீர் வரத்து உயர்ந்து உள்ளது ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் 8 காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.46 அடியாகும். அணைக்கு 1025 கன அடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருந்தது. 535 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 63.8 அடியாகும். அணைக்கு 946 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணை மூடப்பட்டிருந்தது. சிற்றாறு-1 ல் 16.1 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 140 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 100 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
சிற்றாறு-2 ல் 16.2அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 16 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 33.38 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 15.2 அடியாகும்.
இன்று (ஜூன் 8) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கன்னிமார் 18.2
கொட்டாரம் 11
மயிலாடி 20.4
நாகர்கோவில் 29.2
ஆரல்வாய்மொழி 15
பூதப்பாண்டி 25.8
முக்கடல் 10.2
பாலமோர் 37.4
தக்கலை 21
குளச்சல் 15.2
இரணியல் 18
அடையாமடை 41.1
குருந்தன்கோடு 18.4
கோழிப்போர்விளை 7.2 மாம்பழத்துறையாறு 26.4
சிற்றாறு -1 17.4
சிற்றாறு-2 26.2
களியல் 44.8
குழித்துறை 4.4
பேச்சிப்பாறை 49.6
பெருஞ்சாணி 42.4
புத்தன் அணை 40.8
சுருளோடு 31.6
ஆனைக் கிடங்கு 25.8
திற்பரப்பு 32
முள்ளங்கினாவிளை 9.4