நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது.. “நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் முன்பே நீர் தேர்வு மோசடிகள் வெளிவந்துவிட்டன. நீட் வினாத்தாள் வெளியான புகாரை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. நீட் முறைகேடு 24 லட்சம் மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். இந்தியா. கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அவர்களின் குரலை ஒடுக்க இந்தியா கூட்டணி அனுமதிக்காது” என்று தெரிவித்துள்ளார்.