இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என்று தமிழக பாஜக கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெ ல்லியில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வந்திருந்தனர்.
அப்போது, இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன், பாஜக அலுவலகங்களில் மட்டுமே பேட்டி அளிப்பேன், முறைப்படி 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே செய்தியாளர்கள் சந்திப்புக்கான தகவல் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்ட 39 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளரிடம் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.