மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டம், மங்காவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்ரைலா கிராமத்தைச் சேர்ந்தவர் வால்மிக் கோல். இவருக்கு காஞ்சன் கோல் என்ற மனைவி உள்ளார். இவருக்கு தற்போது 24 ஆகிறது. இவரது மாமியார் பெயர் சரோஜ் கோல் (வயது 50). காஞ்சன் கோலுக்கும், இவரது மாமியார் சரோஜ் கோலுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி அன்று இவர்களிடையே சண்டை முற்றியுள்ளது. இச்சண்டையில் ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த காஞ்சன் கோல், தனது மாமியாரை கத்தியால் 95 முறை கொடூரமாக குத்திக் கொலை செய்தார். சம்பவம் நடந்தபோது, சரோஜ் கோல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டதை அறிந்த அவரது மகன், சரோஜ் கோலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து காஞ்சன் கோலை போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, ரேவா மாவட்டத்தின் நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி பத்மா ஜாதவ், தனது 50 வயதான மாமியார் சரோஜ் கோல் கொலைசெய்ததற்காக காஞ்சன் கோல் குற்றவாளி என தீர்ப்பளித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா ஜாதவ், குற்றம்சாட்டப்பட்ட காஞ்சன் கோலுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் விகாஸ் திவேதி கூறுகையில், “இந்தக் கொலை வழக்கில் சரோஜ் கோலின் கணவர் வால்மிக் கோல், குற்றத்தைத் தூண்டிய இணை குற்றவாளியாகக் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்த விசாரணையில் அவருக்கு எதிராக ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்” என்றார்.