தமிழ் சினிமா உலகில் நட்சத்திர நடிகராக இருப்பவர் விஷால். இவர் லைக்கா நிறுவனத்திடம் ரூ.21.29 கோடி கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்தவில்லை என லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது வருகின்ற 28ஆம் தேதி முதல் வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையின் போது விஷால் தரப்பில் லைக்காவிற்கும் தனக்கும் உள்ள பிரச்சனையை தீர்க்க சமரச அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டது. மேலும் இதற்கு சமரச பேச்சு வார்த்தைக்கு தயார் என அவர்கள் தரப்பில் கூறினாலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என லைகா தரத்தில் தெரிவிக்கப்பட்டது.