நாதஸ்வரம் தொடரின் நடிகை ஸ்ரீதிகா கடந்த 2019 ஆம் ஆண்டு சனீஷை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளார் ஸ்ரீதிகா. இவர், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனும், ‘ மகராசி சீரியலில் தன்னுடன் நடிக்கும் இணை நடிகருமான எஸ்.எஸ்.ஆர்.ஆர்யனை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார்.
ஸ்ரீதிகா மற்றும் ஆர்யன் இருவரும் தங்கள் சமூக ஊடகத்தில், “இந்த முக்கியமான செய்தியை எங்கள் சமூக ஊடக குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஸ்ரீதிகா & ஆர்யன் இருவரும் ஏற்கனவே எங்கள் முந்தைய திருமண வாழ்க்கையிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டோம். அது ஏன் என்று சொல்ல நாங்கள் விரும்பவில்லை. யாரையும் குறை சொல்ல அல்லது நமது கடந்தகால வாழ்க்கையிலிருந்து எந்த விதமான எதிர்மறையை விஷயத்தையும் பேச விரும்பவில்லை. ஏனென்றால் தூய நட்பையும், புரிந்துணர்வையும் இறுதியாக நம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையை எங்களுக்கு அளித்தது. உங்கள் அனைவரின் ஆதரவுடனும், எங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்துடனும் நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் எடுத்த இந்த முடிவுக்கு உங்கள் அன்பையும், ஆதரவையும் எப்போதும் போல பொழியுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பான படங்கள், வீடியோக்கள் மற்றும் சமூக ஊடக நேர்காணல்களை விரைவில் பகிர்வோம். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது முதல் கணவரின் பெயருடன் உள்ள தனது இன்ஸ்டாகிராம் ஐடியை மாற்ற முடியவில்லை என்றும், அது விரைவில் சரி செய்யப்படும் ” எனக் குறிப்பிட்டு உள்ளார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.