திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைததார்.இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்த 1,48,149 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகள் :கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும் பாலமாக இருந்து செயல்பட்ட நான் முதல்வன் திட்டத்தால் 76.4 % பொறியியல் மாணவர்களும், 83.8 % கலை அறிவியல் மாணவர்களும் 2022-23ம் கல்வி ஆண்டில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் 1,84,283 மாணவர்கள் நான் முதல்வனில் பதிவு செய்ததில், 1,48, 149 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். இவர்களுக்கு மைக்ரோசாப்ட், ஐபிஎம், இன்ஃபோசிஸ், எஸ்.ஏ.பி, கூகுள் கேம்பிரிட்ஜ், சிமன்ஸ், டசால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன் இணைந்து பயிற்சி வழங்கப்பட்டது உயர் கல்வியில் படிக்கும் மாணவர்களை நிறுவனங்களுக்கு ஏற்ற திறன் கொண்ட மாணவர்களாக மாற்றுவதற்காக வருடத்திற்கு 10 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கில் நான் முதல்வன் திட்டம், மார்ச் 2022ல் தொடங்கப்பட்டது முதல் கல்வியாண்டிலேயே எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையான 10 லட்சத்திற்கும் அதிகமாக, 13 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங், ரோபோடிக்ஸ், மின் வாகனம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டது
2023-24ம் கல்வி ஆண்டில் நான் முதல்வன் திட்டம் ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 2085 கல்லூரிகளில் படிக்கும் 14 லட்சத்து 68 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு பெற்ற 1,48,149 மாணவர்கள் : சாதனை படைக்கும் நான் முதல்வன் திட்டம்.