இந்தியாவில் ஓடும் அனைத்து ரயில்களிலும் குளிர்சாதன வகுப்பு பெட்டிக்கும், படுக்கை வசதி பெட்டிகளில் மட்டும்தான் முன்பதிவு செய்து வசதியுள்ளவர்கள் பயணிக்க முடியும். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் கோடிக்கணக்கான இந்திய மக்கள் பயணிக்க ஒரு ரயிலில் மூன்று சாதாரண பலகை பெஞ்சு பெட்டிகள் மட்டுமே இருக்கிறது. இந்த பெட்டிகளில் அளவுக்க் அதிகமாக ஏழை பயணிகள் ஏறுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பயணிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு நடக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ஒரு ரயிலில் கழிவறையை கூட பயணிகள் விட்டு வைக்காமல் அதற்கு முன்பு படுத்து தூங்கிய காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறை பெட்டியின் முன்பு பயணிகள் படுத்து தூங்கியுள்ளனர். இந்த தொடர்பான காணொளியை
சச்சின் குப்தா என்பவர் பகிர்ந்துள்ளார். இந்த இந்த காணொளியில் முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாதவர்கள் கூட்டமாக ரயிலில் ஏறுகிறார்கள். அவர்கள் நடைபாதை மற்றும் கழிவறையின் முன்பு படுத்து தூங்குகிறார்கள். இதனால் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் இந்த காணொளி தற்போது இணைய தளங்களி பரவி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.