திருநெல்வேலி என்ற நகரத்திற்குஇந்த பெயர் வந்தமைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதன் காலகட்டமும் இதனால் வரை உறுதி செய்யப்படாமல் இருந்தது.
தற்பொழுது திருநெல்வேலி என்ற பெயர் கீழ்வேம்பு நாட்டில் ஒரு பகுதியாக திருநெல்வேலி என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமான பழமையான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகரம் அருகே பழைய கோவிலில் பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 770 ஆம் ஆண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாரந்தக நெடுஞ்சடையன். (768-815) காலத்தில் வெட்டுவிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு வாசகத்தின் படி இந்த கோவில் கல்வெட்டில் பிரம்மபுரி தேவர் என இறைவனை குறிப்பிடுகிறது. இக்கோவிலுக்கு சாத்தம்மை என்ற இறைவன் அடியார் 12 பசுக்களையும் ஒரு கன்று குட்டியும் தானமாக வழங்கியதை குறிப்பிடுகிறது. இதற்காக கோவிலுக்கு திருவிளக்கு ஒன்று வாங்கி வைக்கப்பட்டு மாட்டுப் பாலில் இருந்து நெய் எடுக்கப்பட்டு விளக்கு எரிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தப் பணியை சாத்தன் தேயன் என்பவர் மேற்பார்வையில் நடைபெற்று இருக்கிறது. இ கல்வெட்டின் வாயிலாக திருநெல்வேலி என்ற பெயர் ஆயிரத்து254 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டிருப்பதையும் திருநெல்வேலிக்கு வயது ஆயிரத்து 254 என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.
கல்வெட்டு வாசகம் வருமாறு:-
1.ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாற சடையர்க்கு யாண்டு இரண்டு இவ் 2.வாண்டு கீழ் வேம்பநாட்டு திருநெல்வேலி சாத்தந் தேயத்தை சாத்தி சாத்தம்மை இத் திருநெல் 4.வேலி பிரம்மபுரி தேவர்க்கு வைச்ச திருவிளக்கு ஒன்று இ 5.தனுக்கு சந்திராதித்தவல் நியதம் ஆழாக்கு நெய் அ 6. ட்டுவதாக வைச்ச சாவா மூவா பெயர் பசு பண்ணி ரெண்டரை இந்நெய் 7. முட்டாமல் அட்டுவதாக இப்பசுக் கொண்ட வெட்டிக்குடி எட்டி சா 8. த வேதன் இவனுக்கு புணை இவ்வூர் வெட்டிக்குடி எட்டி மானநடை 9.மாதேவன்…
இதற்கான ஆய்வு பணியில் திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குநர் மாரியப்பன் இசக்கி, தூத்துக்குடி வ. உ. சி. கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ஆறுமுகம் சுடலை மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.