கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, உள்ளிட்ட மலையோர பகுதிகள் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வருகின்ற மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை கடலில் 2.6 மீட்டர் முதல் மூன்று மீட்டர் உயரத்திற்கு பேரவைகளுக்கு வாய்ப்பு உள்ளது. ஜூன் 22 நள்ளிரவு வரை இந்த நிலை தொடர்ந்து இருந்தது எனவே கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் வசிக்கின்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் பேச்சிப்பாறை நீர்மட்டம் 44.28 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 502 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 637 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
பெருஞ்சாணி நீர்மட்டம் 70.37 அடியாக உள்ளது. அணைக்கு 178 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. சிற்றாறு 1ல் 16.07 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 142 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சிற்றாறு 2 ல் 16.17 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கை 15.8 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 43.32 அடியாக உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 18.8 அடியாக உள்ளது.
மழையளவு (மில்லி மீட்டரில்)
கொட்டாரம் 3.2
நாகர்கோவில் 3.4
பூதப்பாண்டி 3.2
முக்கடல் 2
பாலமோர் 6.4
தக்கலை 4.2
குளச்சல் 3.6
அடையாமடை 2.6
குருந்தன்கோடு 3
கோழிப்போர்விளை 6.2 மாம்பழத்துறையாறு 3.2
சிற்றாறு 2 4
பேச்சிப்பாறை 3
பெருஞ்சாணி 4.6
புத்தன் அணை 5
சுருளோடு 4.6
ஆனைக்கிடங்கு 3
முள்ளங்கினாவிளை 6.2