பாளை என்.ஜி.ஓ. காலனி யில் உள்ள தனது அலுவலகத்தில் நெல்லை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்க உள்ளது. அப்போது பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுக்க உள்ளேன். அதன்பின்னர் அங்கிருந்து வந்து ஒவ்வொரு பகுதிக்கும் தலா 3 நாட்கள் என கணக்கிட்டு என்னை வெற்றி பெறச் செய்த மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன்.நெல்லையில் தங்கி மக்கள் பணியாற்றுவேன்.
நெல்லை தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். நெல்லை தொகுதியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து மக்களிடம் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களை பெற்றுள்ளேன். அதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன். மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து தேயிலை தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினேன்.
அப்போது தொழிலா ளர்களை வீடுகளை காலி செய்ய சொல்லக் கூடாது, அவர்களுக்கு 15-ந்தேதி முதல் ஊதியம் வழங்கப் படவில்லை.இந்த பிரச்சினை முடியும் வரை தொடர்ந்து தொழிலா ளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வி.ஆர்.எஸ்.
கடிதங்களை செயல்படுத்தக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளேன்.
அதற்கு நிர்வாகம் தற்போதைக்கு அவர்களை வீடுகளில் இருந்து அப்புறப் படுத்த மாட்டோம்.
தொடர்ந்து சம்பளம் வழங்குவது குறித்து ஒரு வார காலத்திற்குள் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் பலப் படுத்தி ஆற்றை தூய்மைப் படுத்துவேன். குலவணிகர் புரம் ரெயில்வே மேம்பாலம் அமைக்க பாடுபடுவேன். நெல்லையை தலைமையிட மாக கொண்டு ரெயில்வே கோட்டம் அமைக்க பாடுபடுவேன். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் பயன்பாட்டுக்கு வர அனைத்து முயற்சிகளையும்எடுப்பேன். தேர்தல் விண்ணப்பத்தில் வழக்கு களை குறைத்து தெரிவித்து இருப்பதாகபா ஜனதாவினர் புகார் அளித்துள்ளனர்.
எதுவும் குறைக்கப்பட வில்லை. என்ன இருக்கிறதோ அதையே கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.