நடராசா லோகதயாளன்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களில் இருவர் இலங்கையைச் சேரந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக் கடற்பரப.பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் 3 படகுடன் 22-06-2024 அன்று காலை நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட இந்த 22 மீனவர்களில் இருவர் இலங்கையர் எனவும் இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழகத்திற்கு தப்பிச் சென்று இராமேஸ்வரம் பகுதியில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் சுப்பிரமணியம் தீபன் சுப்பிரமணியம் சுதாகர் ஆகிய சகோதரர்களே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1997 ஆம் ஆண்டு போர் உச்சம் பெற்ற சமயம் தப்பிச் சென்று முகாமில் வசிக்கும் இவர்கள் தினக் கூலிக்காக தமிழக மீனவர்கள் படகில் பணியாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.