புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை இன்று (ஜூன் 24) கூடியது. புதிய எம்பிக்கள் பதவி ஏற்றனர்.
தமிழ்நாட்டில் மீண்டும் வெற்றி பெற்று மக்களவை செல்லும் கனிமொழி (தூத்துக்குடி), ஜோதிமணி (கரூர்), தமிழச்சி தங்கபாண்டியன் (தென்சென்னை), முதல் வெற்றியைப் பெற்ற சுதா (மயிலாடுதுறை), டாக்டர் ராணி (தென்காசி), மேற்கு வங்கத்தில் இருந்து மீண்டும் வென்ற மஹுவா மொய்த்ரா, மராட்டியத்தில் இருந்து மீண்டும் வென்ற சுப்ரியா சுலே ஆகியோர் ஒன்றாக சேர்ந்து இருக்கும் படங்களை, கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, “மீண்டும் வந்து விட்டோம்… போரிடத் தயாராக…” , “இந்தப்படை இன்னும் விரிவடையலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.