நாகர்கோவில் மாநகராட்சியில் 8 கிராம ஊராட்சிகளை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திலும் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாகர்கோவில் மாநகராட்சியில் ஆசாரிப்பள்ளம், கரியமாணிக்கபுரம், பறக்கை,
தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள் ஏற்கனவே இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன.
மேலும், தற்போது கணியாங்குளம், புத்தேரி, தேரேகால்புதூர், திருப்பதிசாரம், பீமநகரி, மேலசங்கரன்குழி, தர்மபுரம்(ஒரு பகுதி ), ராஜாக்கமங்கலம் (ஒரு பகுதி ) ஆகிய 8 கிராம ஊராட்சிகள் இணைய உள்ளன. இதற்கான பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.