இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. இதில் சரத்குமார், குஷ்பு, அதிதி ஷங்கர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்திற்கு ‘நேசிப்பாயா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என படக்குழு காணொளி ஒன்றை வெளியிட்டு படத்தின் தலைப்பை அறிவித்துள்ளது. மேலும், படம் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் தலைப்பை வைத்து இப்படம் காதல் படமாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இயக்குநர் விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும், பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர். சமீபத்தில், இந்தியில் படம் இயக்கி வந்த விஷ்ணுவர்தன் தற்போது நேசிப்பாயா படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Akash-murali-padam-Nesippaya.jpg)