‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததை போல, அனைத்து எதிர்க்கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்; அப்போதுதான் தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என சுதாரித்துக்கொள்ளும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஜெயக்குமார் கூறியதாவது: தமிழகத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுப்பதில்லை, கொடிக்கட்ட அனுமதிப்பதில்லை. ஜனநாயக குரல்வலையை நெரிக்கின்றனர். சட்டசபையிலும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து, நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய விவகாரத்தை பற்றி விவாதித்தால் என்ன? விவாதித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பதால் திமுக.வுக்கு பயம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு என்ற நிலைபாடை எடுத்துள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் அதேபோல், இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஆட்சியாளர்களுக்கு புத்தி வரும்; தேர்தல் ஆணையமும் சுதாரித்துக்கொள்ளும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தால் நியாயமான, சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.