கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். அவரது மூத்த மகள் ஸ்டெல்லா (27) பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஸ்டெல்லாவுக்கும் அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த ராஜேசுக்கும்(29) நேற்று முன்தினம் மதியம் கிராத்தூர் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் நடந்தது. ராஜேஷ் மணிமுத்தாறு 9வது பட்டாலி யனில் தலைமை அலுவலக பணிபுரிந்து வருகிறார்.
திருமணத்தில் ஸ்டெல்லாவின் உறவினரான பெண் போலீஸ் ஒருவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி விட்டு புது திருமண தம்பதிகளை படம் எடுத்து காவலர் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டுள்ளார். அதில்
ராஜேசுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாக தகவல் வந்தது. உடனே ஸ்டெல்லா வீட்டிற்கு தகவல் கொடுத்தார்.
அப்போது திருமணம் முடிந்து புதுமணத் தம்பதி மணமகள் வீட்டிற்கு சென்று விட்டனர். பெண் வீட்டார் ராஜேஷ் வெளியே போக விடாமல் சுற்றி வளைத்து பிடித்து வைத்துவிட்டு நித்திரவிளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து ராஜேசை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மணிமுத்தாறு 9வது பட்டாலியனின் தலைமை
எழுத்தராக பணிபுரிவதும் ஏற்கனவே திருமணமாகி மனைவி காவலர் குடியிருப்பில் இருப்பதும் தெரிய வந்தது. கொரோனாவின் போது மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஸ்டெல்லா வேலைக்கு செல்லும் போது பணி நிமித்தமாக வந்த ராஜேசுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
அப்போது பெற்றோர் இறந்து விட்டார்கள். உறவினர்கள் யாரும் இல்லை. நண்பர்கள் மட்டும்தான் உண்டு என்றும் கூறியுள்ளார். அதனை ஸ்டெல்லா முழுமையாக நம்பி விட்டார். கடந்த ஜூன் 26 அன்று ராஜேஷ் 5 நண்பர்களுடன் வந்து தான் திருமணம் செய்து உள்ளார். போலீசார் சுற்றி வளைத்து பிடித்ததும் நண்பர்கள்ஓடிவிட்டனர்.
இது சம்பந்தமாக ஆஷா நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் திருமணம் ஆனதை மறைத்து மற்றொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததாக வழக்கு பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர். பின்னர், அவரை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில் ராஜேஷ் குழித்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.