“ஆம் ஆத்மியின் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் குற்றச்சாட்டுதான் டில்லியில் காங்கிரஸ் தோல்வியடைய காரணம்” என காங்கிரஸ் கவுன்சிலர் அபிஷேக் தத் குற்றம் சாட்டியுள்ளார்.
. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுபான கொள்கை முறைகேடு ஊழலை அம்பலப்படுத்தியது காங்கிரஸ்தான். முறையான விசாரணை நடத்த அப்போதைய அரசிடம் கோரிக்கை வைத்தோம். வழக்குப் பதிவு செய்து 18 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அமலாக்கத்துறையும், சிபிஐயும் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இந்த மதுபான கொள்கை முறைகேடால்தான் இந்தியா கூட்டணி டில்லியில் தோல்வியை தழுவியது. தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றிப் பெற்றிருப்போம். ஊழலில் ஈடுபட்டதால்தான் ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் சிறையில் உள்ளனர். தற்போது அமைச்சர் அதிஷி தர்ணாவில் ஈடுபட்டு நாடகம் நடத்தி வருகிறார்” என கூறினார்.