தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பஹீரா. இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சக்தி சிதம்பரம் இயக்கும் புதிய திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரபல மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்திற்கு ஜாலியோ ஜிம்கானா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து, எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். பிறகு, வுல்ஃப், லைப் இஸ் பியூட்டிஃபுல், மூன் வாக் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், பிரபுதேவா நடித்துள்ள புதிய படம் குறித்த பதிவேற்றம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜே.எம்.ராஜா இயக்கத்தில் பிரபுதேவா நடித்துக்கும் படம் சிங்காநல்லூர் சிக்னல். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சிங்காநல்லூர் சிக்னல் படத்தின் பதாகை வெளியாகியுள்ளது. இதில், பிரபுதேவா போக்குவரத்து காவலராக நடித்துள்ளார் என்பது பதாகை மூலம் தெரிகிறது.
![பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ பட பதாகை](https://uthayannews.ca/wp-content/uploads/2023/08/wolf-movie-update-Prabudeva.jpg)