கோவை மேயர் கல்பனாவைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை பதவி விலகல் செய்துள்ளார்.
கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பணிகளில், தி.மு.க. தலைமை எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை. மேயராக கல்பனா பொறுப்பேற்றதில் இருந்து, மாநகராட்சி ஆணையர்களாக இருந்த ராஜகோபால் சுங்கரா, பிரதாப் உள்பட அனைத்து அதிகாரிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்தார்.
அதேபோல, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடனும் மோதினார். இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பதவி விலகல் செய்தார். ஆணையரிடம் தனது கடிதத்தை வேறு ஒருவர் மூலமாக வழங்கியுள்ளார். மருத்துவ காரணங்களுக்காக பதவி விலகுவதாக கடிதத்தில் கல்பனா கூறியுள்ளார். நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனும் பதவி விலகுவதாக கூறியுள்ளார்.