இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவின் தர்மஷாலா மற்றும் பாலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 200 மிமீ அளவில் மழை அதிகமாக பெய்தது. மழையைத் தொடர்ந்து போக்குவரத்துக்காக மண்டியில் 111, சிர்மூரில் 13, சிம்லாவில் ஒன்பது, சம்பா மற்றும் குலுவில் தலா எட்டு, காங்க்ரா மாவட்டத்தில் ஒரு சாலை என 150 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 334 மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளதாகவும், 55 குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்லா வானிலை ஆய்வு மையம் “மஞ்சள்” எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் ஜூலை 12 வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.
![கனமழை எதிரொலி- இமாச்சலத்தில் 150 சாலைகள் மூடல்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/07/Heavy-rain-himachal-pradesh-150-roads-closed.jpg)