இந்திய தண்டனைச் சட்டம் தற்போது பாரதீய நியாய சன்ஹிதா என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் பாரதீய சாக்ஷிய அதினியம் என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற்று திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, திமுக எம்.பி திருச்சி சிவா, மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.