வடக்கு ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஜான் மாகாணத்தின் கவாஜா டோகோ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் எரிபொருள் எடுத்து வந்த டேங்கர் லாரி மீது அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![ஆப்கானிஸ்தான் சாலை விபத்தில் 8 பேர் பலி](https://uthayannews.ca/wp-content/uploads/2020/12/accident_capita.jpg)