பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, டிரம்ப் சுடப்பட்டார். இந்த சம்பவத்தால் பரபரப்பான சூழல் உருவானது.
பாதுகாப்பு அதிகாரிகள், டிரம்பை சுட்டவனை சுட்டுக்கொன்றனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் வசித்து வந்துள்ளார் என்று எப்பிஐ தெரிவித்தது.
இவர் ஏன் டிரம்பை சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.