வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் முதியவர் ஒருவர் 30ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அதே பகுதியைச் சேர்ந்த கந்தையா செல்லச்சாமி (வயது 80) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவரும் அவரது மனைவியும் சம்பவம் நிகழ்ந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி அன்று காலை வெளியே சென்றிருந்தவேளை அவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.