தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டியில் நடைபெற்றது. தற்போது, அடுத்தகட்ட படப்பிடிப்பு கொச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடி வாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
