ந.லோகதயாளன்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு 22ம் திகதி மாலை வெளியாகியது. இதில் இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் பிரசோதன் 186 புள்ளிகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இதேநேரம் யாழ் தொன் பொஸ்கோ மாணவர் ஒருவர் 185 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.