பு.கஜிந்தன்
இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில், தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.
இப்போட்டி 07.02.2025 அன்று வெள்ளிக்கிழமை கொழும்பு றேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
தெல்லிப்;பளை மகாஜனக் கல்லூரியை எதிர்த்து குருதாகல் மலியதேவ மகளிர் கல்லூரி மோதியது. இப்போட்டி ஆட்டநேர நிறைவில் 1:1 என சமநிலையானது. வெற்றி – தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் மகாஜனக் கல்லூரி 3:2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.