இலங்கை கடற்படை நடவடிக்கை:
(9-02-2025)
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்த இரண்டு மீன் பிடி விசைப் படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் 9ம் திகதி ஞ ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்து இரணைதீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை முடித்துக் கொண்டு மீனவர்கள் 14 பேரும் விசைப்படகுடன் கிளிநொச்சி மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் கள் என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.