இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டவையே இவ்வாறு ஏலத்தில் விற்கப்பட்டன
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 8ம் திகதி சனிக்கிழமை காலை பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிசாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு விசாராணை மேற்கொள்ளப்பட்டு மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அரசுடமையாக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட லம்பாடி ரக மீன்பிடி படகு இரண்டு இலட்சத்து பன்னிரண்டாயிரம் ரூபாவிற்கும், மீன்பிடி வலைகள் ஒரு இலட்சத்து எண்பத்தோராயிரம் ரூபாவிற்கும், இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்கள் அறுபத்து நான்காயிரம் ரூபாவிற்கும், குளிரூட்டல் பெட்டி ஐம்பத்தையாயிரம் ரூபாவிற்கும், இரண்டு ஜிபி எஸ் கருவிகள் நாற்பத்தாறாயிரத்து நூறு ரூபாவிற்கும், நங்கூரம் எட்டாயிரம் ரூபாவிற்குமாக ஐந்து இலட்சத்து அறுபத்தாறாயிரத்து நூறு ரூபாவிற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பகிரங்க ஏலத்தில் இந்திய மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவை இருபது இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரத்து முன்நூற்றைம்பது ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லம்பாடி – 212000/-
வலை – 181,000/-
வெளி இணைப்பு இயந்திரம்- 36,000/- + 28,000/-
நங்கூரம் – 8,000/-
குளிரூட்டல் பெட்டி – 55,000/-
ஜிபிஎஸ் – 5100/- + 41,000/-
566100/-
வழக்கு இலக்கம் – 39/23
1327 இலக்க படகு
2022 ஆம் ஆண்டு 12/29
4 பேர்
மொத்தம் 20,42,350/- ரூபாய்கள்