பு.கஜிந்தன்
யாழ். மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதிகளை, நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் டிஅமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவர் சந்தித்தார்.
குறித்த சந்திப்பில் சீனா அரசாங்கத்தினால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள் மற்றும் உணவுப் பொதிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் வடக்கு மீனவ சமூகத்துக்கு சீனாவின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மீனவர்கள் சங்கத்தினர் முன்வைத்தனர்.