கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரும் இணைந்துகொண்டு சுமார் 10 கிலோமீட்டர்கள் தூரம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தனர்
பு.கஜிந்தன்
கொழும்பில் இருந்து ஆரம்பித்த துவிச்சக்கர வண்டி பவனி யாழ். புத்தூர் வைத்தியசாலையை வந்தடைந்தது!
புத்தூரில் அமைந்துள்ள தூய லூகா மெதடிஸ்த திருச்சபை வைத்தியசாலையின் அபிவிருத்திக்கான நிதி சேகரிப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் துவிச்சக்கரவண்டிப் பவனி 15ம் திகதி சனிக்கிழமை அன்றையதினம் குறித்த வைத்தியசாலையை வந்தடைந்தது.
கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலே புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள், சிங்களவர்கள், வெள்ளையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிதி திரட்டும் துவிச்சக்கர வண்டி பவனியில் ஈடுபட்டிருந்தனர்.
80பேர் கடந்த 12.02.2025 அன்று கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நான்கு நாட்கள் பயணம் செய்து சனிக்கிழமை அ ன்றையதினம் யாழ்ப்பாணத்தின் புத்தூரை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்தவர்கள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மங்கல வாத்தியங்கள் இசைக்க வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வு ஆரம்பமாகின்றபோது கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரும் இணைந்துகொண்டு சுமார் 10 கிலோமீட்டர்கள் தூரம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தனர். அத்துடன் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் துவிச்சக்கர வண்டி போட்டியில் பதக்கம் பெற்றவரும் கலந்துகொண்டார்.