பு.கஜிந்தன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் 31 ஆவது நினைவு நாள் பிரித்தானியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது, ஹெரொவ் ஆர்ட்ஸ் சென்டரில் (Harrow Arts Centre) 28ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் நடைபெற்றது.
இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு கலந்து கொண்டவர்கள் வரிசையில் நின்று அவரது உருவப்படத்திற்கு வணக்கம் செலுத்தினர்.