பொலிவியா நாட்டின் மேற்கு போடோசி பிராந்தியத்தில் உள்ள உயுனி-கோல்சானி நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி எதிர் திசையில் பாய்ந்தது. இதில் மற்றொரு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பேருந்துகளும் கவிழ்ந்து நொறுங்கியது. பேருந்தில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
