யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/409 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு வீடு பகுதியளவிலும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.