சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு… தேர்தல் முடிந்தவுடன் ஒரு பேச்சு… என தி.மு.க. இரட்டை வேடம். கேஸ் மானியமாக ரூ.100 தருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தனர், இதுவரை நிறைவேற்றவில்லை.
மக்கள் பிரச்சனை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் வெளியேறி பின்னர் முதல்வரை பேச வைத்து சிறுமைப்படுத்துகின்றனர். இன்னும் 9 மாதங்கள்தான் இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியாக மாறப்போவது வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.