மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு 30 நாட்களுக்குள் ஆளுனர் ஒப்புதல் தரவேண்டும். ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் அந்த மசோதாக்களை அதிபருக்கு அனுப்ப வேண்டும். ஆளுனர் பரிந்துரைத்த மசோதாக்கள் மீது அதிபர் 90 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மசோதாக்கள் மீது முடிவு எடுக்கவில்லையென்றால் தக்க காரணங்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து சம்மந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுனருக்கு பாதகமானதாகவும், மாநில அரசுகளுக்கு சாதகமானதாகவும் பார்க்கப்படுகிறது. இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை துணை அதிபர் ஜக்தீப் தன்கர் விமர்சனம் செய்தார். இந்நிலையில், 3 நாட்கள் பயணமாக தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி நேற்று டில்லி சென்றார். அவர் துணை அதிபர் ஜக்தீப் தங்கரை சந்தித்தார். துணை அதிபர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக துணை அதிபர் தங்கர், ஆளுனர் ஆர்.என்.ரவி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
