மன்னார் தலைமன்னார் பகுதியில் காணப்படுகின்ற கடலுக்குள் உள்ள ஆறு தீடைகள் ராமர் பாலம் என அழைக்கப்படும் பகுதியை சுற்றுளா பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கனகேஸ்வரன் தெரிவித்தார்.
இப் படகு சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் கடந்த 21ம் திகதியன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது
கலந்துரையாடலில் வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் பத்திநாதன் மற்றும் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர் W m கீர்த்தி ஶ்ரீ சந்திர்ரத்தின மற்றும் பிரதேச செயலாளர் முப்படையினர் போலீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மே மாதம் 15 ஆம் திகதி இத்திட்டத்தினை ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழக்கபட்டு நீண்ட காலமாக தாமதமான இந்த திட்டத்தினை வெகு விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாக்க வேலைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான இக்கூட்டத்தில் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது என்றார்.
இதேநேரம் பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகள் எண்ணிக்கை, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று கடற்படையினர் அறிக்கை சமர்ப்பிப்பர் எனவும் தீர்மானிக்கப்பட்டதோடு அடுத்த கட்டமாக சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடும் கட்டணம் தொடர்பில் தீர்மானிப்பதாகவும் அன்றறைய கூட்டத்தில் முடிவு காணப்பட்டுள்ளது.