– நெடுந்தீவில் டக்ளஸ் தேவானந்தா!
நான் நெடுந்தீவுக்கு நன்றியையும் விசுவாசத்தையும் எதிர்பார்த்து வரவில்லை என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்த நெடுந்தீவு மண்ணில் அன்றொருபொழுது மக்களின் துயர்துடைக்க பதவிகள் இல்லாது எவ்வாறு வந்தேனோ அதேபோன்றுதான் இன்றும் உங்களிடம் வேறும் டக்ளஸ் தேவானந்தாவாக
வெறுமையாகவே என் மக்களை சந்திப்பதற்காக வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார் .
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் ஏட்வேட் யூலியட் குமார் தலைமையில் ஒன்றைபனையடி 05 ம் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்ரதல் பரப்புரை கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் எமக்கு உண்டு.
தீவக பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த செயற்றிட்டங்களின் தொடர்ச்சியை தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்கள் கட்சியின் வீணைச் சின்னத்தை வெற்றிபெறச் செய்து எதிர்காலத்தை தமக்கானதாக உருவாக்கிக் கொள்வார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு நெடுந்தீவிற்கு சென்றுள்ள தோழர் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்த வேளையே அவர் இதனை தெரிவித்தார்