மார்க்கம் பிராந்தியத்தில் சிறப்பாக இயங்கிய வண்ணம் அங்கு வதியும் தமிழ் மூத்தோர்களின் நலன்களையும் பொழுது போக்கு அம்சங்களையும் ஏற்பாடு செய்யும் அமைப்பானமார்க்கம் தமிழ் முதியோர் சங்கம் நடத்திய பொதுக் கூட்டமும் சித்திரைப் புத்தாண்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 25-04-2025 அன்று வெள்ளிக்கிழமை மாலை மார்க்கம் நகரில் உள்ள ஆர்மேனியன் சனசமுக நிலைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவங்களுக்கு சங்கத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மேற்படி விசேட வைபவங்களில் தற்போது லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும்; மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதி வேட்பாளர் ரிம் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் அங்கத்தவர்கள் வழங்கிய பாடல் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியன இடம்பெற்றன
கனடா உதயன் பத்திரிகையின் சார்பில் அதன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மற்றும் அரசியல் சமூக செயற்பாட்டாளர் Deepak Telreja ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்