நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் தற்போது முழு நேர அரசியலில் மும்மரமாக இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தில் சீமான் விவசாயியாக நடிப்பதாக தகவல் வெளியானது. மு.களஞ்சியம் சீமானை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து சீமான் அடுத்ததாக தர்மயுத்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். படக்குழு வெளியிட்ட இந்த போஸ்டரில் ‘தீர விசாரிப்பதே மெய்’ என்ற ஹேஷ்டேக் உடன் வெளியாகியுள்ளது, சீமான், அனு சித்தாரா மற்றும் ஆர்கே சுரேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர் சுப்பிரமணியம் என்பவர் எழுதி இயக்கும் இந்த படத்தை ஆதம்பாவா மற்றும் சிவக்குமார் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். படத்தின் முதல்காட்சியை நடிகர் சூரி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
