கனடா வாழ் விவசாயத்துறை கலாநிதியும் எழுத்தாளருமான பால. சிவகடாட்சம் அவர்கள் எழுதிய மருத்துவ நூல் ஒன்றுக்கு தமிழ்நாட்டு நிறுவனங்களான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் சென்னை நியு செஞ்சரி புத்தக நிலையமும் இணைந்து விருதொன்றை வழங்கியுள்ளன. அவரது ‘தமிழர் மருத்துவம்- ஒரு வரலாற்றுப் பார்வை’ என்னும் நூலுக்கே இவ்வாறு வழங்கப்பெற்றுள்ள சிறப்பு விருது கிடடியுள்ளது பாராட்டுக்குரியது.
























