பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் பிரசாரத்தில் ஈடுபட 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. காங்கிரஸின் சசி தரூர், பா.ஜ.க.வின் ரவிசங்கர் மற்றும் பைஜயந்த் பாண்டா, தி.மு.க.வின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலே, சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சஞ்சஜ் குமார் ஜா உள்ளிட்டோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க விரைவில் சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை அவர்கள் உலகிற்கு கொண்டு சேர்ப்பார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
