சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அவரது இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வநதது. சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அதுவும் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.