இலங்கையின் முன்னாள் அமைச்சர்களும் கொள்ளையர்களுமான மஹிந்தானந்தவுக்கு- 20 வருடம் நளினுக் 25 வருட கடூழிய சிறை கொழும்பு நிரந்தர நீதிமன்றம் தீர்ப்பளிப்பு
(கனகராசா சரவணன்)
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்ததாக எழுந்த ஊழல் வழக்கில முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் இரண்டரை இலச்சம் ரூபா அபதாரம் முன்னாள் வர்த்தக அமைச்சரும் முன்னாள் லங்கா சதோச தலைவருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 4 இலச்சம் அபராதமாக செலுத்துமாறு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் 29ம் திகதி அன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டு தீர்பளித்தது.
குறித்த இருவருக்கும் எதிராக 2014 செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை இறக்குமதி செய்யப்பட்ட 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 சதுரங்கப் பலகைகள் சம்பந்தப்பட்ட மோசடி கொள்முதல் ஒப்பந்தத்தை மையமாகக் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (சிஜஏபிஒசி) ஊஐயுடீழுஊ ஆணையாளர் நாயகத்தால் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 70 இன் கீழ் ஆறு கடுமையான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த குறித்த வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் இன்று கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் மகேஷ் வீரமன், பிரதீப் அபேரத்ன மற்றும் அமலி ரணவேரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இடம்பெற்றது.
இதன்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட் டுள்ளதாகவும் அரசுக்கு ஏற்பட்ட மொத்த நிதி இழப்பு ரூ. 53.1 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்தது எனவே முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் இரண்டரை இலச்சம் ரூபா அபதாரம் முன்னாள் வர்த்தக அமைச்சரும் முன்னாள் லங்கா சதோச தலைவருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 4 இலச்சம் அபராதமாக செலுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு தீர்பளித்தனர்.
அதேவேளை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்காக ஜனாதிபதி வழக்கறிஞர் அனில் சில்வாவும், மஹிந்தானந்த அளுத்கமகேவுக்காக ஜனாதிபதி வழக்கறிஞர் ஷனக ரணசிங்கவும் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி சட்டத்தரணிகளில் ‘நல்லவர்களும்’ உள்ளார்கள் ‘கொள்ளையர்களு’ம் உ;ள்ளார்கள் என்பது இங்கு புலனாகின்றது