King Charles, at the Senate chamber in Ottawa, delivers the Throne Speech of the 45th Parliament of Canada.
கனடா தனது அரசியலமைப்பை பிரித்தானியாவிடமிருந்து தழுவி மாற்றங்களைச் செய்து முழு சுதந்திரத்துடன், மகத்தான வெற்றிகளையும் ஈட்டி திகழ்கின்றது.
ஒட்டாவா செனற்சபை வளாகத்தில் கனடாவின் 45வது பாராளுமன்ற சிம்மாசக உரையில் மன்னர் சார்ஸ் புகழாரம்
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
கனடா தனது அரசியலமைப்பை பிரித்தானிய தேசத்திடமிருந்துதான் தழுவிக் கொண்டது. அவ்வாறு இருந்தாலும் தனக்கேற்றவாறு அதில் மாற்றங்களைச் செய்து தற்பொது “முழு சுதந்திரத்தை அடைந்த ஒரு தேசமாக , மகத்தான வளர்ச்சியையும் வெற்றிகளையும் ஈட்டிய ஒரு தேசமாக உயர்ந்து நிற்கின்றது. அத்துடன்.
“கனடிய தேசமானது பிரித்தானியா , பிரான்ஸ் மற்றும் பூர்வீகக் குடிகளின் பண்பாட்டுக் கோலங்களையும் அவற்றின் மூலததையும் தழுவியவண்ணம் , தைரியமானதும் , இலட்சியங்கள் பல கொண்ட ஒரு புதுமையான நாடாக தற்போது உலகின் கண்களுக்குத் தெரிகின்றது. மேலும் , இருமொழிகள் , வெளிப்படையான பன்முக கலாச்சார மற்றும் நல்லிணக்கம் சார்ந்த கொள்கைகளைப் பின்வற்றிய வண்ணம் தன்னை சரியான பாதையில் பயணிக்கச் செய்துள்ளது” இவ்வாறு கடந்த திங்கட்கிழைமை 26ம் திகதி ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள கனடாவின் செனட் சபை வளாகத்தில் இடம்பெற்ற கனடாவின் புதிய லிபரல் அரசாங்கத்தின் 45வது பாராளுமன்றத்தின் சிம்மாசன உரையை ஆற்றிய போது திறந்த மனதுடனும் உண்மையான வார்த்தைகளுடனும் தெரிவித்தார்.
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனற் சபை உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானவர்க்ள அமர்ந்திருந்த அவையொன்றில் பிரித்தானியாவின் மன்னர் சார்ள்ஸ் அவர்கள் தனது சிம்மாசன உரையை வாசித்த போது பல தடவைகள் சபையோரின் பாராட்டுக்களையும் கரகோசங்கள் மூலம் பெற்றுக்கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மன்னர் சார்ள்ஸ் அவர்கள் தனது உரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதார மற்றும் கனடா தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு எதிராக கனடாவின் சுயாட்சியை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் உதவும் வகையில் மிகவும் அவதானமாக தனது கருத்துக்களைப் பகிர்ந்த கொண்டார்.
அவர் மேலும் உரைய்ற்றிய போது கனடாவின் இறையாண்மையையும் அதன் தனித்துவமான அடையாளத்தையும் தொடர்ந்த தக்கவைத்துக் கொண்டு ஒரு செழிப்பான நாடாக விளங்குவதைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். என்று தெரிவித்த அவர் கனடிய தேசிய கீதத்தின் சில வரிகளை அழுத்தமாக உச்சரித்து அதன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட போது சபையோர் எழுந்து நின்று கரகோசம் செய்து மகிழ்ந்தனர்.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினரிடமிருந்து வேறுபட்ட ஒரு அமைப்பில் அரசியலமைப்பு அதிகாரத்தின் உடல் உருவகமான மன்னர் சார்லஸ், கனேடிய அரசாங்கம் ஒரு தருணம் நெருக்கடி என்று அழைத்ததில், 24 மணி நேர சூறாவளி வருகைக்காக நாட்டின் தலைநகருக்கு வந்தார், ஒரு சக்திவாய்ந்த அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் ஒரு வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளார் மற்றும் பிராந்திய விரிவாக்கத்திற்காக போராடுகிறார்.
மேற்படி தனது உரையை கனடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்களின் அலுவலகத்துடன் கலந்தாலோசித்து மோனார்க் எழுதிய உரையைஆரம்ப கருத்துக்களின் அடிப்படையில் புதிய தாராளவாத கொள்கையுடன் ஆளும் கட்சியின் நிகழ்ச்சி நிரலை சார்ந்து தனது உரையை ஆற்றினார் என பல துறைசார்ந்தவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் மூலம் தெளிவாகியுள்ளது.உருவாக்கியது.
மன்னர் சார்ள்ஸ் அவர்கள் தொடர்ந்து தனது உரையில் ” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக இணைக்கும் அச்சுறுத்தல்களை எதிர்ப்பதில் உள்ள தனது ஆதரவைக் காண்பிப்பதாகவும் கனடா ஒரு ஆபத்துக்களை எதிர்கொள்ளாது உலகில் முன்னோடியான நாடாக சவால்களை எதிர்கொள்கிறது என்றும் பாராட்டினார்.
ம்னனர் சார்ள்ஸ் அவர்கள் தனது உரையில் கனடாவின் முடியாட்சி மற்றும் பழங்குடி மக்களுடனான நாட்டின் உறவு பற்றிய தனிப்பயனாக்கப்பட்ட பிரதிபலிப்புக்களாக தனத உரையை தொடர்ந்த மேலும் கனடா தேசமானது “உண்மை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கியயதும் வார்த்தைகள் மற்றும் செயற்பாடுகளில் ஒரு நேரான பாதையில் தொடர வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளியிட்டார்.
ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தில், இந்த கனடிய தேசமானது காலனித்துவப்படுத்தப்பட்ட பிரித்தானிய முடிக்குரிய நாடாக விளங்குவதை பிரித்தானியா விரும்புகின்றது என்றும், தொடர்ந்து கனடாவின் தனித்துவமான தேசிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் தொடர்ச்சியான அறிக்கைகள், மற்றும் கனடாவின் “தனித்துவமான அடையாளத்தைபாராட்டிய வண்ணம் அதை தொடர வேண்டும். இது தேசிய விழுமியங்களைப் பாதுகாப்பதில் உள்ள துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் கனடா உதாரணமாக விளங்குகின்றது என்றும் அதை உலகெங்கிலும் உ ள்ள நாடுகள் அங்கீகரித்துள்ளன , “என்றும் கூறினார்,
மேலும் மன்னர் சார்ள்ஸ் அவர்கள் தனத உரையின் இறுதிப் பகுதியில் “கனடாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும், பாதுகாப்பு இராணுவ மற்றும் பொலிஸ் சேவைகளிலிருந்தும், 2025 ஆம் ஆண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கலந்துகொண்ட ஏனைய பிரதிநிதிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்த மன்னர் சார்ள்ஸ் அவர்கள் கனடிய அரசியல் சாசனத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் பாதுகாவலர்களாக விளங்கும் சகல கனடிய உத்தியோகத்தர்களுக்கும் , பரந்த மனப்பான்மையுடன் நன்றி தெரிவித்தார.
மேலும் மன்னர் சார்ள்ஸ் அவர்கள் தனது தாயார் எலிசபெத் இரண்டாம் எலிசபெத் பாராளுமன்றத்தின் அமர்வைத் ஆரம்பித்த காலத்திலிரந்து கனடா “வியத்தகு முறையில் மாறிவிட்டது” என்ற அறிவிப்புடன் தனது உரையை நிறைவு செய்தார்.