ஹலோ ரெல்ப் நிறுவனமானது 2002ம் ஆண்டில் இருந்து இலங்கையில் மனிதாபிமான செயற்பாடான நிலக்கீழ் கன்னி வெடிகளை அகற்றும் பணிகளை இலங்கையின் வடக்கு கிழக்கு மட்டுமன்றி அணைத்து மாகாணங்களிலும் செய்து வருகின்றது.
இவ் நிறுவனமானது 2002ல் இருந்து செவ்வாய்க்கிழமை 3ம் திகதி வரை சுமார் 300000 கண்ணி வெடிகளை அகற்றி தமது மனிதாபிமான செயற்பாட்டின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறது.
இவ் அர்ப்பணிப்பின் வெளிப்பாட்டினை ஹலோ ரெல்ப் நிறுவனத்தின் ஊழியர்கள் அன்றைய தினம் முகமாலையில் அமைந்துள்ள தமது வேலைத் தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.