முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நேற்று மாலை மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது. உயர்நீதிமன்றம், சி.பி.ஐ. அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் நடந்தது. இந்த சோதனையில் அது வெறும் புரளி என தெரிய வந்தது. ஏற்கனவே சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த நிலையில் 3-வது முறையாக தற்போது சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் மின்அஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தது யார் என காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
